உள்ளூர் செய்திகள்

2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்

Published On 2022-07-16 08:50 GMT   |   Update On 2022-07-16 08:50 GMT
  • விருதுநகர் அருகே 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
  • திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர் அதிக இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகி றது‌. இதனை கணவர் கண்டித்துள்ளார்‌.

இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று தனது 3 வயது மகனுடன் மாயமானார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கருப்பசாமியின் மனைவி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News