உள்ளூர் செய்திகள்

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம்

Published On 2022-06-25 08:19 GMT   |   Update On 2022-06-25 08:19 GMT
  • வாலிபர் தலை துண்டித்து கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). இவரது நண்பர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தரைக்குடியைச் சேர்ந்த வசந்தபாண்டி (23), கமுதி கோட்டைமேட்டை சேர்ந்த இருள் என்ற இருளாண்டி (31), இருளாண்டி (19), சிலம்பரசன் (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பாப்பாங்குளத்தில் உள்ள மயானத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது ஆனந்தராஜூக்கும், நண்பர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்தவர் நண்பர்கள் ஆனந்தராஜை கழுத்தை அறுத்து கொன்றனர்.

திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் இருள் என்ற இருளாண்டி, வசந்த பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News