உள்ளூர் செய்திகள்

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2023-04-03 07:59 GMT   |   Update On 2023-04-03 07:59 GMT
  • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) என்பது தெரியவந்தது.

விருதுநகர்

விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது18). இவர் செவல்பட் டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி முடிந்து விருதுநகரில் உள்ள உணவகத்தில் லோகேஷ் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 1 மணிய ளவில் வேலையை முடித்து விட்டு லோகேஷ் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி லோகேஷிடம் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

விருதுநகர் தாழையப்பன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது22). இவர் நேற்று லட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் மிரட்டி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற னர்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) ஆகிய 2 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News