உள்ளூர் செய்திகள்

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-07-16 14:18 IST   |   Update On 2022-07-16 14:18:00 IST
  • விருதுநகர் அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன் (வயது 38) இவரது மனைவி சாரதா. கடந்த சில மாதங்களாக தங்கேஸ்வரன் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் கணவன், மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது.

குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மனைவி கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த தங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி பாரதிநகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி, பட்டாசு தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் விரக்தி அடைந்த பால்பாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி கருப்பம்மாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News