உள்ளூர் செய்திகள்

கோவையில் தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம்: 90 பேர் மீது வழக்கு

Published On 2025-02-05 11:13 IST   |   Update On 2025-02-05 11:13:00 IST
  • இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, பிப்.5-

திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடக்க இருந்தது.

போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் பங்கேற்க சென்றனர். அவர்களை அந்தந்த மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு இந்து முன்னணியினர் புறப்பட்டனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதாக உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தடையை மீறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினரான ராம்நகரை சேர்ந்த சதீஷ், நிர்வாகிகள் குனியமுத்தூர் பிரபாகரன், புதிய சித்தாபுதூரை சேர்ந்த தசரதன், பாபா கிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.***

இவர்களது மகள் தேவி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் தனது மகன்களான ரித்திக், ரோகித் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரித்திக், ரோகித் ஆகியோர் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

கிட்டம்மாள் பாட்டி தனது மகள் தேவியை பார்க்க மாதத்தில் 2 முறை பல்லடம் செல்வார்.

அப்படி செல்லும் போது, அங்கு கிட்டம்மாள் பாட்டியின் பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் பளுதூக்கும் பயிற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்த கிட்டம்மாள் பாட்டிக்கு, தானும் பளுதூக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரிடமும், மகள் மற்றும் பேரன்களிடம் தெரிவித்தார்.

பேரன்கள் உடனே தங்களது பாட்டிக்கு பளுதூக்குவது குறித்து பயிற்சி அளித்துள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டம்மாள் பாட்டி தனது மகள் வீட்டிற்கு சென்று விடுவார்.

அங்கு பேரன்கள் அவருக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வந்தனர்.

மேலும் தாங்கள் பயிற்சி பெற்று வரும் உடற்பயிற்சி நிலையத்திற்கும் அழைத்து சென்றனர்.

அந்த உடற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர் சதீஷ், கிட்டம்மாள் பாட்டி பயிற்சி செய்வதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மேலும் பாட்டிக்கு, பளுதூக்குவதில் இருக்கும் ஆர்வத்தை அறிந்து கொண்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிக்கு அழைத்து சென்றார்.

அங்கு நடந்த போட்டியில், கிட்டம்மாள் பாட்டி தனது முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5-வது இடம் பிடித்து அசத்தினார். இதுதவிர கவுந்தப்பாடியில் நடந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஸ்ட்ராங் மேன் ஆப் சவுத் இந்தியா 2024 என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கிட்டம்மாள் பாட்டிக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பது விருப்பம். இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

Tags:    

Similar News