உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விஜய் வசந்த்

Published On 2022-12-24 19:52 IST   |   Update On 2022-12-24 19:52:00 IST
  • பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நிறுவப்பட்ட புல் குடிலை திறந்து வைத்தார்
  • அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

கன்னியாகுமரி:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் களை கட்டி உள்ளன. மத பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையுடன் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அவ்வகையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று பல்வேறு கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளில் மக்களுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நிறுவப்பட்ட புல் குடிலை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் குமார், லாரன்ஸ், ஆரோக்கிய ராஜன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் டைசன், திபாகர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் துணை தலைவர் விஜூ மற்றும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News