உள்ளூர் செய்திகள்

போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள்.

வேம்பார்பட்டி அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு

Published On 2023-08-11 13:55 IST   |   Update On 2023-08-11 13:55:00 IST
  • வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் கொசவபட்டி மேல்நிலைப் பள்ளியிலும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Tags:    

Similar News