உள்ளூர் செய்திகள்

மண் லாரி மோதி வாலிபர் காயம்

Published On 2022-08-14 09:15 GMT   |   Update On 2022-08-14 09:15 GMT
  • இன்ஸ்பெக்டரை சிறைபிடித்து போராட்டம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த பெருமாள் குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிலர் லாரி மூலம் ஏரி மண் கடத்தல் நடக்கிறது.

நேற்று இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கள்ளத்தனமாக ஏரி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது.

இதில் பைக்கில் சென்ற பெருமாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (வயது 42) என்பவரின் கால்கள் முறிந்தது.விபத்தில் காயம் அடைந்த பூபாலனை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வாகனத்தை மறித்து சிறை பிடித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி டி.எஸ்.பி பழனி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் 2 மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விபத்து குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News