உள்ளூர் செய்திகள்

நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

Published On 2022-11-30 10:00 GMT   |   Update On 2022-11-30 10:00 GMT
  • துப்பாக்கி பறிமுதல்
  • வனத்துறையினர் ரோந்து சென்ற போது சிக்கினார்

வேலூர்:

அமிர்தி அருகே உள்ள சஞ்சிபுதூர் பகுதியில் வேலூர் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 24) என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.

அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் வைத்திருந்தது கள்ளத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News