உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய விடிய பெண்கள் போராட்டம்

Published On 2022-10-20 09:28 GMT   |   Update On 2022-10-20 09:28 GMT
  • அளவீடு செய்த நிலத்திற்கு ஆவணம் கேட்டு முறையீடு
  • உதவி கலெக்டர் சமாதானம் செய்தார்

வேலூர்:

அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் அடுத்த மலைகன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகா மில் கலெக்டர் குமாரவே ல்பாண்டியனிடம் " தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு மனைக்கான நிலத்தின் அளவை குறை வாக காண்பித்து பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதை மாற்றவேண்டும், நிலத்தை அளவீடு செய்யவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தனது தந்தை அலைந்து, அலைந்து இறந்தே போய்விட்டார் என்று முறையிட் டார். மேலும் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து கலெக்டர் வருவாய் துறையினரிடம் விஜயலட்சுமி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆலோசனையின்பேரில் சப் கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் ராமலிங்கம், சுதா, வட்ட வழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ஜெ யந்தி, சர்வேயர் திலீப்குமார், விஏஓ ரேணு மற்றும் உதவியாளர்கள் பள் ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் பா துகாப்புடன் அளந்து காண்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது தாயார் மற்றும் தங்கை ஆகியோருடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து 3 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிலம் அளவீடு செய்ததற்கான ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆவணங்களை தரும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி 3 பேரும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News