உள்ளூர் செய்திகள்

மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Published On 2023-11-14 08:08 GMT   |   Update On 2023-11-14 08:08 GMT
  • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வேலூர்:

குடியாத்தம் வீரிசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மலர் (வயது 48).

தீபாவளி பண்டிகையை யொட்டி கே.வி.குப்பத்தை அடுத்த வடு கன்குட்டை கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அதிரசம், முறுக்கு, எள்வடை உள்ளிட்ட பலகாரங்களை கொடுப்பதற் காக நேற்று முன்தினம் மொபட்டில் கோவிந்தசாமி, மலர் ஆகியோர் சென்றனர்.

சென்னங்குப்பம் அருகே உள்ள ஆலம ரம் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து நாய் மீது மோதாமல் இருப்ப தற்காக கோவிந்தசாமி உடனடியாக பிரேக் பிடித்தார்.

அதனால் கட்டுப்பாட்டை இழந்து மொபட் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த கோவிந்த சாமி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மலர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News