உள்ளூர் செய்திகள்

வேலூரில் பள்ளி குழந்தைகள் 3,469 பேருக்கு காலை உணவு

Published On 2022-09-12 09:47 GMT   |   Update On 2022-09-12 09:47 GMT
  • நாளை சோதனை முறையாக வழங்கப்படுகிறது
  • மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு

வேலூர்:

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த திட்டம் வருகிற 16-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் சோதனைக்கு கொண்டுவரப்படுகிறது.

முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தினந்தோறும் இந்த பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News