உள்ளூர் செய்திகள் (District)

லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி

Published On 2023-08-14 09:35 GMT   |   Update On 2023-08-14 09:35 GMT
  • கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சா லையில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கண்ணாடி லோடுகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் வந்துக் கொண்டிருந்த வேன் மோதியதில் வேன் டிரைவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பிரகாஷ் (வயது 36) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (வயது 35) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார். லோடு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பினார்.

கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News