உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 4,934 மையங்களில் பயிற்சி

Published On 2023-06-01 09:23 GMT   |   Update On 2023-06-01 09:23 GMT
  • கலெக்டர் தகவல்
  • தன்னார்வலர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது

வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் கடந்த 2021-ம் ஆண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி என 3 நிலை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 934 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 934 தன்னார்வலர்கள் மூலம் 57 ஆயிரத்து 490 மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News