உள்ளூர் செய்திகள்
- வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் டி.ஐ.ஜி பங்களா பின்புறம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60) இவர் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்றார்.
அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென இருதய ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருதயராஜ் கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய இருவரையும் பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் தோட்ட பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) சரத்குமார் (27) என்பது தெரிய வந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே வேலூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.