உள்ளூர் செய்திகள்

சாமியாரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-11-04 08:08 GMT   |   Update On 2023-11-04 08:08 GMT
  • ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பு
  • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

வேலூர்:

சென்னையை சேர்ந்தவர் தனானந்தகிரி (வயது 50). இவர் சாமியார் போன்று பல்வேறு இடங்களுக்கு செல்வார். கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் வந்த அவர் வேலூருக்கு வந்தார்.

கேரளமாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (50). இவரும் வேலூரில் சுற்றித்திரிந்து கிடைக்கும் வேலைகளை செய்து சாலையோரம் எங்காவது தூங்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

இந்தநிலையில் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தனானந்தகிரி படுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5.11.2021 அன்று காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனானந்தகிரியை, பாபு அகமதுஷேக் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுஅகமது ஷேக்கை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜராகி வாதாடினார்.

நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பாபு அகமதுஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பாபுஅகமதுஷேக்கை, போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

Tags:    

Similar News