உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-06-02 15:23 IST   |   Update On 2023-06-02 15:23:00 IST
  • தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.

பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர், நீல நிற டீசர்ட் மற்றும் கருப்பு கலர் லோயர் அணிந்து உள்ளார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News