உள்ளூர் செய்திகள் (District)
- நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஜமேந்தார் தோப்பு தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் புகழேந்தி (வயது 20) இவர் கொரியர் சர்வீஸில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டாவில் இருந்து வேலூர் நோக்கி அவரது பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.