உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை

Published On 2022-09-21 14:51 IST   |   Update On 2022-09-21 14:51:00 IST
  • சிறுவன் போக்சோவில் கைது
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி வீடு உள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று ள்ளான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ள்ளான். மாணவி சத்தம் போடவே அந்த சிறுவன் மாணவியை மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார் இதனை தொடர்ந்து குடியாத்தம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு லட்சுமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17 வயதான சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News