உள்ளூர் செய்திகள்

லாரி மோதி பள்ளி மாணவி சாவு

Published On 2023-04-05 15:07 IST   |   Update On 2023-04-05 15:07:00 IST
  • சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 16), தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தொரப் பாடியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மாணவியின் மீது மோதியது.

அதில் அவர் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுமிதாவின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News