என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பள்ளி மாணவி சாவு"

    • அக்காள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் கள் டில்லிராணி (வயது 9), ஜெயசுதா (15). டில்லிராணி கண்ணமங்கலம் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அக்காள் - தங்கை இருவரும் மொபட்டில் கண்ணமங்கலம் நோக்கி சென்றனர். மொபட்டை ஜெயசுதா ஓட் டினார்.அப்

    போது, முன்னால் சென்ற வேன் திடீரென திரும் பிய போது, எதிர்பாராதவித மாக வேனின் பின்பு றம் மொபட் மோதியது. இதில் அக்காள்-தங்கை இரு வரும் படுகாயம் அடைந்த னர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக உயி ரிழந்தாள். ஜெயசுதா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகு மார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 16), தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தொரப் பாடியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மாணவியின் மீது மோதியது.

    அதில் அவர் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுமிதாவின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×