உள்ளூர் செய்திகள்

ராணுவ வீரர் வீட்டில் பணம் கொள்ளை

Published On 2023-01-07 15:11 IST   |   Update On 2023-01-07 15:11:00 IST
  • பூட்டை உதை்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த பெரியஊனை கிராமத்தை சேர்ந்த வர் ராமசாமி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 29). ராணுவ வீரர். இவர் தனது மனைவி பிரசவத்திற்காக விடுமு றையில் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அணைக்கட்டு அருகே மலைச்சந்து கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மீண்டும் மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத் திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது மனைவியின் பள்ளிச் சான்றுகள் உள்ளிட்டவைகளை மர்ம கும்பல் திருடிச்சென் றது தெரிய வந்தது.

இது குறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News