- ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பியூலா எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வித்யாவதி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சேகரன் விளக்க உரையாற்றினார்.
சத்துணவில் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது பணிபுரியும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், உதவியாளர் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும். சத்துணவு மானியத்தை உயர்த்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
உதவியாளர், சமையலர் 5 ஆண்டுகள் பணி முடித்து இருந்தால் அவரவர் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.