உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-11-20 09:41 GMT   |   Update On 2023-11-20 09:41 GMT
  • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
  • போலீசார் தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்

வேலூர்:

குடியாத்தம்- காட்பாடி சாலையில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45) இவரது மகன்கள் பரத் (23) மணிகண்டன் (20).

செல்வி இன்று தனது மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

கூட்டம் நடைபெரும் காயிதே மில்லத் அரங்கம் வெளியே திடீரென பரத் செல்வி ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது பெண் போலீசார் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்தது. தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் இடத்தில் சுவரை எழுப்பினர். இதனால் நாங்கள் அவதிப்பட்டோம்.

அருகே இருந்த கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். கோவில் சார்பில் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு பாதையில்லாத நிலை உள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுவரை இடித்து அகற்ற வேண்டும். எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News