உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியர்கள் மார்பில் கத்தி போட்டு மொகரம் பண்டிகை

Published On 2023-07-29 14:56 IST   |   Update On 2023-07-29 14:56:00 IST
  • பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்
  • கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது

வேலூர்:

வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கர்பலா போரில் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் மற்றும் அவரின் குடும்பத்தினரை பட்டினியிட்டு கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று வேலூர் சைதாப்பேட்டை, பிடிசி சாலை ஆகிய இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் மார்பில் கத்திபோட்டு ரத்தம் சொட்ட, சொட்ட புனித போரில் ஹுசைன் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் தங்களை தாங்களே வருத்திக் கொண்டு மொகரம் பண்டிகையை அனுசரித்தனர்.

மேலும் முக்கிய வீதிகளில் இஸ்லாமிய பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

Similar News