உள்ளூர் செய்திகள்

கால்நடை ஆஸ்பத்திரி கட்ட எதிர்ப்பு

Published On 2023-05-10 10:08 GMT   |   Update On 2023-05-10 10:08 GMT
  • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
  • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

வேலூர்,

வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும்.

இதனால் இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரி கட்ட அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். ஆஸ்பத்தி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News