பாட்டாளி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
பாட்டாளி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடந்தது
- தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாட்டாளி தொழிற்சங்க மண்டல செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.தலைவர் தயா கார்த்தி, பொருளாளர் போஜோ முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ இளவழகன், முன்னாள் எம்பி சண்முகம், பாமக மாவட்ட தலைவர் பி.கே. வெங்கடேசன் வக்கீல் பிரிவு சந்துரு, சேகர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். சம்பளம் மற்றும் பென்ஷன் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பிஎப் பண பலன்களை ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு சேர்ந்த அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.