உள்ளூர் செய்திகள்
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கேரளா மாநிலம், எர்ணாகுளம், புதுவை நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.
இதனால் விஷ்ணுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. விஷ்ணுவுக்கு அவரது பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விடுதியில் தங்கி இருந்த விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் விஷ்ணுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விஷ்ணுவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.