உள்ளூர் செய்திகள்

பரதராமியில் மனுநீதி நாள் முகாம்

Published On 2022-09-15 10:22 GMT   |   Update On 2022-09-15 10:22 GMT
  • 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் கேசவேலு, துணைதலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.இ.தியாகராஜன், எஸ். இந்திராகாந்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஜே.பத்ரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட வழங்கல் அலுவலர் தேவி அனைவரையும் வரவேற்றார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், வேளாண் உதவி இயக்குனர் உமா சங்கர உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்க ட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு 32 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் 109 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, வேளான் உபகரணங்கள், விதைகள் தொகுப்பு வீடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், திமுக பிரமுகர்கள் ஆனந்தன், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News