search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Justice Day Camp"

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
    • 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் இன்னிசைக் கச்சேரி மேடையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி 219 பயனாளிகளுக்கு ரூ. 13லட்சத்து 38ஆயிரத்து மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மேலும் 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

    முகாமிற்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு வரவேற்று பேசினார்.

    ஊட்டச்சத்து, கால்நடைத்துறை உள்பட பல்வேறு கண்காட்சிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

    இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மகாதேவன், மாறன், செந்தில்குமார், தனி தாசில்தார் செந்தில்குமார், படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரை ச்செல்விஆனந்தன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் கேசவேலு, துணைதலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.இ.தியாகராஜன், எஸ். இந்திராகாந்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஜே.பத்ரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்ட வழங்கல் அலுவலர் தேவி அனைவரையும் வரவேற்றார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், வேளாண் உதவி இயக்குனர் உமா சங்கர உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்க ட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு 32 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் 109 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, வேளான் உபகரணங்கள், விதைகள் தொகுப்பு வீடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், திமுக பிரமுகர்கள் ஆனந்தன், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • 87 பேருக்கு நலத்திட்ட உதவி
    • கலெக்டர் வழங்கினார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சேங்குன்றம் கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது.

    இம் முகாமிற்கு தாசில்தார்கள் நெடுமாறன், கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் கவுரப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குமரன், துணைத் தலைவர் ஹேமலதாதியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் லலிதா வரவேற்றார்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு மனு நீதி நாள் முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 87 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, நில பட்டா, வாரிசு சான்று சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் கருவிகள், விதைகள், மாற்றுத்திறனாளி களுக்கான 3 சக்கர வாகனம் என ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி, மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முரளிதரன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், துணை தாசில்தார் சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் காந்தி நன்றி கூறினார்.

    ×