உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-06 13:46 IST   |   Update On 2023-08-06 13:46:00 IST
  • தீராத வயிற்று வலியால் விரக்தி
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் குமரகுரு ( வயது 50). இவரது மனைவி அமலு (43). தம்பதியினருக்கு பிள்ளைகள் உள்ளனர்.

அமுலு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் கூட நோய் குணமடையவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாது அமலு தனது விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில், புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News