உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2023-04-16 08:45 GMT   |   Update On 2023-04-16 08:45 GMT
  • காட்பாடியில் இன்று நடந்தது
  • உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது

வேலூர்:

வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 20-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடக்

கிறது. முகாமில் கண்பார்வை குறைபாடு, கண்புரை ஆகியவற் றுக்கு பரிசோதனை செய்யப்படும். கண்புரை நோயாளிகள் முகாம் நடைபெறும் அன்றே சென்னை பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படு வார்கள். அவர்களுக்கு விழிலென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவச மாக வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கே.கோவிந்த ராஜுநாயுடு, ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, கே.ஆர்.விஜயன், சி.குமரவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News