உள்ளூர் செய்திகள்

வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி ரூ.40-க்கு விற்பனை

Published On 2023-06-02 15:26 IST   |   Update On 2023-06-02 15:26:00 IST
  • காய்கறியின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது
  • பொதுமக்கள் அதிர்ச்சி

வேலூர்:

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் நேற்று முதல் காய்கறியின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி கத்தரிக்காய் 1 கிலோ ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.60, புடலை ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.80, பீன்ஸ் ரூ.85, கேரட் ரூ.65, பாகற்காய் ரூ.60, முருங்கை ரூ.80, பீட்ரூட் ரூ.55 வெண்டை ரூ.70, முள்ளங்கி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைந்ததால் ரூ.10- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இஞ்சியும் அதிகபட்சமாக ரூ.200 வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News