உள்ளூர் செய்திகள்

8 வயது சிறுவன் ஏரிநீரில் மூழ்கி சாவு

Published On 2023-05-01 13:07 IST   |   Update On 2023-05-01 13:07:00 IST
  • பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்க்கு சென்றபோது பரிதாபம்
  • விளையாட சென்றபோது ஏற்பட்ட விபரீதம்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள மருதவல்லி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா இவர் கிராம பகுதிகளில் நடக்கும் வாரச் சந்தைக்கு சென்று கீரைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் 2-ம் வகுப்பு படிக்கும் தனது மகனான ஜெயகுமார் (வயது 8) என்பவரை அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்க்கு அழைத்து சென்று விட்டுள்ளர்.

குழந்தை களுடன் விளையாட சென்ற ஜெயகுமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் ஜெயக்கு மாரை அக்கம்பக்கம் தேடி வந்தனர்.

இதனைய டுத்து நேற்று அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணகரன், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஊனை கிராமத்தை சுற்றியுள்ள கிணறு, குழம், குட்டைகளில் தேடிதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

அந்த கிராமத்தில் உள்ள ஏரியின் நடுவே இருக்கும் சிறிய கிணற்றின் நீரில் ஜெயகுமார் பிணமாக மிதந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட சென்ற சிறுவன் தண்ணீரிலர் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News