உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

சுடுகாட்டு பகுதி ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்

Published On 2023-04-27 13:13 IST   |   Update On 2023-04-27 13:13:00 IST
  • உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்த நபர் கிராம மக்களிடம் தகராறு
  • அளவிடு செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், கிராமத்திற்கு சொந்தமாக சுமார் 40 சென்ட் இடம் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் சுடுகாட்டை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தார். இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ராமக்கா என்ற மூதாட்டி நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அவரது உடலை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் சுடுகாடு பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், இங்கு உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்த நபர் கிராம மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்து பயிர் வைத்துள்ள இடத்தை உடனே அகற்றி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் வருவாய்த் துறையினர், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி ராமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 40 செண்டு இடத்தை முறையாக அளவிடு செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News