உள்ளூர் செய்திகள்
திருமகள் ஆலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை
- நாளை தொடங்குகிறது
- கல்லூரி முதல்வர் அறிவிப்பு
குடியாத்தம்:
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.