உள்ளூர் செய்திகள்
காட்பாடியில் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்
- நோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வேலூர்:
பழைய காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபருக்கு திடீ ரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டார். ஆனாலும் குணமடையவில்லை. அதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு வாலிபரின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டது. அதன்முடிவில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாலிப ருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, நோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.