உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் அருகே மலை பாம்பு பிடிபட்டது

Published On 2023-08-10 09:45 GMT   |   Update On 2023-08-10 09:45 GMT
  • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
  • காப்புக் காட்டில் விட்டனர்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு 8 மணியளவில் பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

Similar News