உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு

Published On 2023-02-02 09:43 GMT   |   Update On 2023-02-02 09:43 GMT
  • மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 2 நாட்களாக வேலூரில் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

இன்று காலையில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்திற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது கிரீன் சர்க்கிள் அருகே வேலூர் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க பொய்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதல்அமைச்சரை வரவேற்றனர்.

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, டாக்டர் வி.எஸ். விஜய், 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர், வட்ட செயலாளர் தேவமணி, சாந்தி அம்பேத்கர், பாலு, சீனு, பகுதி செயலாளர்கள் தயால் ராஜ், சுந்தர விஜி, பாலமுரளி கிருஷ்ணா, முனவர் பாஷா, ஐயப்பன், தங்கதுரை, கணேஷ் சங்கர், சக்தி, சசிகுமார், முருகப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கதிரேசன், அன்பு நிதி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News