உள்ளூர் செய்திகள்

பைக் ஓட்டியபடியே மாற்றுத்திறனாளி திடீர் சாவு

Published On 2023-03-18 14:40 IST   |   Update On 2023-03-18 14:40:00 IST
  • நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 44) மாற்றுத்திறனாளி. இவரால் முடிந்த வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

நேற்று மாலை அவரது 3 சக்கர பைக்கில் வேலப்பாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

பைக் ஓட்டியபடியே அவர் இறந்ததால் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் பைக் மோதி நின்றது.

இதனை கண்ட பொதுமக்கள் ஓடிச் சென்று அவரை மீட்டனர். அப்போதுதான் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News