உள்ளூர் செய்திகள்

நர்சிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

Published On 2023-05-20 13:00 IST   |   Update On 2023-05-20 13:00:00 IST
  • ஹெல்மெட் அணிந்து மர்ம கும்பல் கைவரிசை
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். அச்சகம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சுதா (வயது 38) குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சுதா தனது கணவர் கஜேந்திரனுடன் அருகே உள்ள பகுதிக்கு நடந்து சென்றார்.

அப்போது மகளிர் கல்லூரி அருகே வரும்போது ஹெல்மேட் அணிந்தபடி பைக்கில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் கீழே இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சுதா கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் தப்பி சென்றனர்.

இது குறித்து சுதா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News