வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.17.13 கோடி மது விற்பனை
- தீபாவளியையொட்டி விற்று தீர்ந்தது
- வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்
வேலூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் பண்டிகை நாட்களில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். நேற்று நடந்த தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தேவையான அளவு மது வகைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மதுபிரியா்களும் வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்.
தீபாவளியையொட்டி வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 108 மதுக்கடைகள், உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் கடைகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை மட்டும் ரூ.10 கோடிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 79 கடைகளில் ரூ.7.13 கோடிக்கு என மாவட்டம் முழுவதும் ரூ.17.13 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.