உள்ளூர் செய்திகள்

5 குழந்தைகள் உட்பட 150 காங்கிரஸ் கட்சியினர் கைது

Published On 2023-04-20 14:34 IST   |   Update On 2023-04-20 14:34:00 IST
  • அணைக்கட்டில் தபால் அலுவலகம் முற்றுகை
  • போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

அணைக்கட்டு:

அணைக்கட்டில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 5 குழந்தைகள் உட்பட 150 பேர் காங்கிரஸ் கட்சியினர் கைது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அணைக்கட்டு பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

இதில் 5 சிறுகுழந்தைகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News