உள்ளூர் செய்திகள்

லாரிகள் மூலம் காய்கறிகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தனர்.

12 டன் காய்கறிகள் வேலூரில் இருந்து அனுப்பி வைப்பு

Published On 2023-11-23 08:31 GMT   |   Update On 2023-11-23 08:31 GMT
  • திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
  • அன்னதானம் வழங்கப்படுகிறது

வேலூர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெற உள்ளது.

தீபத் திருவிழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தீப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்காக 12 டன் எடையுள்ள காய்கறிகள் சேகரிக்கப்பட்டன.

இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், கோஸ் என அனைத்து வகையான காய்கறிகள் ஒரு லாரி முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News