உள்ளூர் செய்திகள்

கோவையில் 3-வது முறையாக அடித்துச் செல்லப்பட்ட ெவள்ளலூர் தரைப்பாலம்

Published On 2022-08-27 11:07 GMT   |   Update On 2022-08-27 11:07 GMT
  • கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
  • தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கோவை

கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழைக்கு கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர்- சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படு இருப்பதால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

2 முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இத னால் வாகன‌ ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்ப டுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்ப டுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்ப டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

Tags:    

Similar News