உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் வாகன சோதனை

Published On 2023-07-05 14:40 IST   |   Update On 2023-07-05 14:40:00 IST
  • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
  • போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து வந்தது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News