உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் தொடக்கம்

Published On 2023-05-08 07:30 GMT   |   Update On 2023-05-08 07:30 GMT
  • உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
  • மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.

இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News