உள்ளூர் செய்திகள்

அப்பர் கயிலை காட்சி விழா நடந்தது.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா

Published On 2023-08-17 10:01 GMT   |   Update On 2023-08-17 10:01 GMT
  • காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தீா்த்தவாரியும் நடைபெற்றன.
  • அப்பா் பெருமானுக்கு சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறும். அதன்படி ஆடி அமாவாசையான நேற்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தீா்த்தவாரியும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, இரவு ஐயாறப்பா் கோயிலில் தென் கயிலாயம் எனப்படும் அப்பா் சன்னதியில் அப்பா் பெருமானுக்குச் சிவபெருமான் கயிலைக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாா்ய சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Tags:    

Similar News