உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2023-02-27 05:12 GMT   |   Update On 2023-02-27 05:12 GMT
  • 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.
  • இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சி சரஸ்வதி கார்டன் அருகே உள்ள பள்ளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். பின்னர் அவ்வழியாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் இதனை பார்த்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூமலூர் கிராம நிர்வாக அதிகாரி மங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News