உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த காட்சி.

நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Published On 2023-03-30 14:25 IST   |   Update On 2023-03-30 14:25:00 IST
  • நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
  • வழக்கமாக உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

நெல்லை:

பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற னர்.

உண்டியல் எண்ணும் பணி

நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களை அவ்வப்போது திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த டிசம்பர் 13-ந்தேதி உண்டியல்கள் எண்ணப் பட்டது.

இந்நிலையில் இன்று கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.

நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றினர்.

கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியா ளர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். வழக்கமாக கோவில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

தற்போது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினர் பங்கேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News